பழம் பெருச்சாளி ...

காங்கிரஸ் கட்சி என்னதான் இந்திய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், அது தமிழகத்தை கண்டு பயந்து கொண்டு தான் இருக்கிறது. காரணம், இங்கு மட்டும் தான் காங்கிரசை விட எமகாதகர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் "அரசியல் சாணக்கியர்" கலைஞர் இன்னொரு பக்கம் "இரும்புப் பெண்மணி" அம்மா.

இவர்கள் இருவரை விட்டால் காங்கிரசுக்கு தமிழகத்தில் வேறு நாதி இல்லை. இருவரில் எவராவது ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டி உள்ளது.

இரண்டு வாரங்கள் கலைஞரை மிரட்டியும், காக்க வைத்து அசிங்கப்படுதியும் வந்த காங்கிரசை ஒரு முடிவால் தன்னிடம் கெஞ்ச வைத்து விட்டார் கலைஞர். அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலக போவதாக அவர் எடுத்த முடிவு, இதனை தொடக்கம் என்றும் வைத்து கொள்ளலாம்.

தொடக்கத்தில் 80 தொகுதிகள் என்று உறுதியாக இருந்த காங்கிரஸ் இப்போது 50 கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடும் போலும். இப்படி ஒரு நிலைமை வர என்ன காரணம்.

  • கலைஞரின் "Timing Sense", அதிமுக-வும் தேமுதிக-வும் கூட்டணி அமைத்து விட்ட நிலையில் திமுக-வின் இந்த முடிவு காங்கிரசுக்கு மரண அடி. அம்மா-விடம் சென்றால் பிச்சைக்காரனை போல் நடத்துவார்.
  • கலைஞரின் நம்பிக்கை, அப்படியே காங்கிரஸ் ரோஷம் வந்து தனித்து போட்டியிட்டாலும் எந்த தொகுதியிலும் டெபாசிட் திரும்ப வராது.
  • கலைஞரின் திட்டம், அம்மா காங்கிரசை சேர்த்துக்கொண்டலும் சரி தேமுதிக-வுடன் மூன்றாவது அணி அமைத்தாலும் சரி தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை சுட்டிக்காட்ட கலைஞர் தயாராக உள்ளார்.
  • கலைஞரின் சுயநலம், CBI கலைஞரின் வீட்டு வாசல் வரை வந்து விட்டது. எனவே கூட்டணியில் இருந்து விலகியதால் தான் காங்கிரஸ் தங்களை பழி வாங்குகிறது என்று தமிழக மக்களிடம் வந்து முறையிடுவார். இந்த வழக்கை உச்சநீதி மன்றம் கண்காணிக்கறது அதனால் காங்கிரசால் எதுவும் செய்ய முடியாது என்று கலைஞருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மக்களுக்கு நன்றாக தெரியும்.
கலைஞர் கடந்த காலங்களில் தனது அரசியல் சாமர்த்தியத்தால் மக்களை ஏமாற்றியிருக்கலாம், ஆனால் இந்த முறை அது மிகவும் கடினம். இதை தேர்தல் முடிவுகள் வந்த பிறகாவது கலைஞர் புரிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment