உங்கள் ஒட்டு !!!

ஏப்ரல் 13 க்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை அனைவரும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று கிட்டத்தட்ட முடிவு செய்திருக்க கூடும். நிச்சயம் அது திமுக விற்கு எதிராக தான் இருக்கும்.

அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். இதில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தேமுதிக வின் பட்டியல் தான். கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு தன் பலத்தை நிரூபித்தாலும், கேப்டன் அவர்களால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இம்முறை அதிமுக விடம் 60 தொகுதிகள் கேட்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தாலும் திமுக வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஜெயலலிதா அளித்த தொகுதிகளை பெற்றுக்கொண்டார். இறுதி நேரத்தில் அதிமுக செய்த குளறுபடியால் மக்கள் விரக்தியில் இருந்தாலும் கேப்டனை ஆதரிப்பதில் தெளிவாக உள்ளனர்.

இம்முறை நிச்சயம் தேமுதிக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படிப் பெற்று அதிமுக விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிமுக-தேமுதிக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பம். அப்படி அமைந்தால் மட்டுமே ஜெயலலிதா-வை கட்டுப்படுத்த முடியும் இல்லையென்றால் அவர் மதம் கொண்ட யானை ஆகிவிடுவார்.

கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் கேப்டன் மக்களுக்கு நிச்சயம் பல நன்மைகளை செய்வார். ஆக கேப்டன் படங்களை பார்த்து அவர் மேல் கோபம் கொண்டு யாரும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், அது வேறு இது வேறு.

என்னடா பிரச்சாரம் மட்டும் பண்றான், வாக்குறுதி எதுவும் இல்லையானு கேக்காதீங்க ப்ளீஸ். இனிமே சொல்ல என்ன இருக்கு, எதாவது இலவசமா கொடுக்கரன்னு சொன்னா தா அது தேர்தல் அறிக்கைன்னு நம்மள பழக்கப்படுத்தி வச்சிருச்சு இந்த பெரிசு. விட்டா கல்யாணம் ஆகாத பசங்களுக்கு இலவசமா பொண்ணு தர்றேன்னு கூட சொல்லிடுவாரு.

எது எப்டியோ எங்க தொகுதில தேமுதிக போட்டி போடுது, அதனால ஒரு ஒட்டு இப்பவே உறுதி ஆயிடுச்சு. நீங்களும் தேமுதிக-அதிமுக கூட்டணிக்கே ஒட்டு போடணும்னு உங்கள வேண்டி விரும்பி கேட்டுக்கறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் இதையே சொல்லுங்க, எப்டியாவது தமிழ்நாட்ட காப்பாத்தணும்.

இவ்வளுக்கு பிறகும் நா என் ஜாதி கட்சி யாரு கூட கூட்டணி வச்சிருக்கோ அவனுக்கு தா ஒட்டு போடுவேன் இல்ல கலைஞர் இலவசமா மிக்சி கிரைண்டர் தர்றாரு அவருக்கு தா ஒட்டு போடுவான்னு நீங்க முடிவு பண்ணி வச்சிருந்தா, அப்புறம் இன்னும் 5 வருஷத்துக்கு நம்மள குனிய வச்சு குதிரை ஏறிடும் இந்த கலைஞர் குடும்பம். ஆகவே கொஞ்சம் யோசிங்க, கலைஞர் ரத்தக் காட்டேரிய விரட்ட ஜெயலலிதா பிசாசால மட்டும் தா முடியும். மூன்றாவது அணியெல்லாம் அடுத்த தேர்தல்ல கண்டிப்பா வரும் அப்பா இத ரெண்டையும் விரட்டிடலாம்.

அதற்கு இம்முறை கேப்டன் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் தான் முடியும். எனவே உங்கள் வாக்குகளை நமது "முரசு" சின்னத்திற்கே அளிக்கும்படி உங்களை இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

பழம் பெருச்சாளி ...

காங்கிரஸ் கட்சி என்னதான் இந்திய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், அது தமிழகத்தை கண்டு பயந்து கொண்டு தான் இருக்கிறது. காரணம், இங்கு மட்டும் தான் காங்கிரசை விட எமகாதகர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் "அரசியல் சாணக்கியர்" கலைஞர் இன்னொரு பக்கம் "இரும்புப் பெண்மணி" அம்மா.

இவர்கள் இருவரை விட்டால் காங்கிரசுக்கு தமிழகத்தில் வேறு நாதி இல்லை. இருவரில் எவராவது ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டி உள்ளது.

இரண்டு வாரங்கள் கலைஞரை மிரட்டியும், காக்க வைத்து அசிங்கப்படுதியும் வந்த காங்கிரசை ஒரு முடிவால் தன்னிடம் கெஞ்ச வைத்து விட்டார் கலைஞர். அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலக போவதாக அவர் எடுத்த முடிவு, இதனை தொடக்கம் என்றும் வைத்து கொள்ளலாம்.

தொடக்கத்தில் 80 தொகுதிகள் என்று உறுதியாக இருந்த காங்கிரஸ் இப்போது 50 கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடும் போலும். இப்படி ஒரு நிலைமை வர என்ன காரணம்.

  • கலைஞரின் "Timing Sense", அதிமுக-வும் தேமுதிக-வும் கூட்டணி அமைத்து விட்ட நிலையில் திமுக-வின் இந்த முடிவு காங்கிரசுக்கு மரண அடி. அம்மா-விடம் சென்றால் பிச்சைக்காரனை போல் நடத்துவார்.
  • கலைஞரின் நம்பிக்கை, அப்படியே காங்கிரஸ் ரோஷம் வந்து தனித்து போட்டியிட்டாலும் எந்த தொகுதியிலும் டெபாசிட் திரும்ப வராது.
  • கலைஞரின் திட்டம், அம்மா காங்கிரசை சேர்த்துக்கொண்டலும் சரி தேமுதிக-வுடன் மூன்றாவது அணி அமைத்தாலும் சரி தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை சுட்டிக்காட்ட கலைஞர் தயாராக உள்ளார்.
  • கலைஞரின் சுயநலம், CBI கலைஞரின் வீட்டு வாசல் வரை வந்து விட்டது. எனவே கூட்டணியில் இருந்து விலகியதால் தான் காங்கிரஸ் தங்களை பழி வாங்குகிறது என்று தமிழக மக்களிடம் வந்து முறையிடுவார். இந்த வழக்கை உச்சநீதி மன்றம் கண்காணிக்கறது அதனால் காங்கிரசால் எதுவும் செய்ய முடியாது என்று கலைஞருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மக்களுக்கு நன்றாக தெரியும்.
கலைஞர் கடந்த காலங்களில் தனது அரசியல் சாமர்த்தியத்தால் மக்களை ஏமாற்றியிருக்கலாம், ஆனால் இந்த முறை அது மிகவும் கடினம். இதை தேர்தல் முடிவுகள் வந்த பிறகாவது கலைஞர் புரிந்து கொள்ளட்டும்.