அறிவாலயத்தில் .............

துரைமுருகன் : என்ன தலைவரே சோகமா இருக்கீங்க ?

கலைஞர் : பின்ன என்னயா, நானும் என்னென்னவோ பண்ணி பாத்துட்டேன், அந்தப் பய நம்ம கூட கூட்டணிக்கு வரே மாட்டீங்குறானே ...

பேராசிரியர் : எப்படியா வருவான், அவன் மண்டபத்த இடிக்கும்போது யோசிச்சிருக்கனும், அட வடிவேலுவ விட்டு அவன குடிகாரன்னு திட்டும்போதாவது யோசிருக்கனும்

கலைஞர் : புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு நா என்ன கனவாயா கண்டேன் ?

துரைமுருகன் மைன்ட் வாய்ஸ் : இந்த வசனத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல

கலைஞர் : என்னயா துர, என்ன யோசன ?

துரைமுருகன் : ஒன்னுமில்ல தலைவரே, அடுத்தது யார தூது விடலாம்னு யோசிக்குறேன் ...

பொன்முடி : தூது போகறத விடுங்க, அந்தாளு வேற புதுசா ஒரு நிபந்தனை போட்டிருக்காரே !

பேராசிரியர் : ஆமா, அதப் பத்தியும் நாம கொஞ்சம் யோசிக்குனமே

கலைஞர் : யோசிச்சிக்கிட்டு இருந்தா நாம தனியாத்தான் நிக்கனும், இருக்கவே இருக்கு "மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை தவிர்க்க" வசனம், அத வெச்சு ப்ளே பண்ண வேண்டியதுதான் ...

ஸ்டாலின் : அப்படீனா, ஈழத் தமிழர் பிரச்சினைல சமரசம் செஞ்ச மாதிரி ஆயிடுமே ...

கலைஞர் : அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல, அஞ்சு லிட்டர் கசப்பு மருந்த கொடுத்தா, அத நம்புறதுக்கும் ஊருக்குள்ள ஆளுங்க இருக்குதுக ....

பேராசிரியர், ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி அனைவரும் கோரசாக ஆச்சரியமான குரலில் : யாரு தலைவரே அது ?

கலைஞர் (சிரித்துக்கொண்டே) : வார்த்தைக்கு வார்த்தை உடன்பிறப்புன்னு சொல்றமே அவுங்கதான் !!!