பாரதி !!!

தேடிச் சோறுநிதன் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம்வாடி துன்பமிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து

நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிறைஎனப்பின் மையும்

பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்

என்றான் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்துடுதல் வேண்டும்

இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து

மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் ...

1 comment:

  1. வாழ்க்கையின் உண்மை விளக்கத்தை உணர்த்தும் வரிகள்!!
    கொடுங் கூற்றுக் கிறைஎனப்பின் மாயும்! pls correct it!!

    ReplyDelete